எனக்கு தீபாவளி கோயம்பேட்டில்தான்: அமைச்சர் விஜயபாஸ்கர்

 

எனக்கு தீபாவளி கோயம்பேட்டில்தான்: அமைச்சர் விஜயபாஸ்கர்

எனக்கு தீபாவளி கோயம்பேடு பேருந்து நிலையத்தில்தான் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கரூர்: எனக்கு தீபாவளி கோயம்பேடு பேருந்து நிலையத்தில்தான் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நாளை முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் இருந்து போக்குவரத்து சேவையை கண்காணிக்க உள்ளேன். மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்வதை உறுதி செய்ய உள்ளேன்.நாளை முதல் சென்னையில் முகாமிட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுப்பேன். 

எனவே எனக்கு தீபாவளி என்பது கோயம்பேடு பஸ் நிலையத்தில்தான். தொழிலாளர்கள் அதிகமாக உள்ள கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் இருந்து கூடுதல் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.