எனக்கு ஓட்டு போடல தூக்குல தொங்குவேன்: பாஜக வேட்பாளர் மிரட்டல்

 

எனக்கு ஓட்டு போடல தூக்குல தொங்குவேன்: பாஜக வேட்பாளர் மிரட்டல்

தனக்கு வாக்களிக்காவிட்டால் தூக்கில் தொங்கிவிடுவேன் என ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஜெய்ப்பூர்: தனக்கு வாக்களிக்காவிட்டால் தூக்கில் தொங்கிவிடுவேன் என ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மிரட்டல் விடுத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்திற்கு டிசம்பர் 7-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 200 தொகுதிகளை கொண்டிருக்கும் ராஜஸ்தானை தக்கவைக்க பாஜகவும், பாஜகவை வீழ்த்தி அரியணையில் ஏற காங்கிரஸ் கட்சியும் தீவிர செயல்பாடுகளில் இறங்கியுள்ளன. இரண்டு கட்சிகளும் தங்களது பிரசாரத்தை வேகப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் ஸ்ரீசந்த் கிருபலானி, நிம்பஹாரா தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது,  நீங்கள் எனக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்யவேண்டும். அப்படி எனக்கு வாக்களிக்காவிட்டால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.