எனக்கு இளைஞர்களின் ஆதரவு அதிகம்: உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை!

 

எனக்கு இளைஞர்களின் ஆதரவு அதிகம்: உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை!

இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பிறகு அவர் செல்லும் இடமெல்லாம் இளைஞர்கள் அதிக ஆதரவு கொடுப்பது நம்பிக்கை அளிப்பதாகவும், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் அளவுக்கு தி.மு.க இளைஞரணி செயல்படும்

உதயநிதி ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் தி.மு.க இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றார். அதிலிருந்து  அவர் தி.மு.க வின் அனைத்து கட்சி விவரங்களில் மிகுந்த ஆர்வம் காட்டியும், தி.மு.க கட்சிக் கூட்டங்களில் பங்கேற்றும் வருகிறார். இந்நிலையில், நேற்று பொள்ளச்சியை அடுத்த நெமகத்தில் மழை நீர்வரத்து கால்வாயை தூர்வாரும் பணியை துவங்கி வைத்தார். 

Udhayanidhi stalin

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், இளைஞரணிக்கான உறுப்பினர் சேர்க்கை துவங்கி விட்டதாகவும், பகுதிக்கு குறைந்தது 10 ஆயிரம் பேர் வீதம், 234 தொகுதிகளிலும் சேர்த்து சுமார் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கப் போவதாக கூறினார். 

மேலும், இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பிறகு அவர் செல்லும் இடமெல்லாம் இளைஞர்கள் அதிக ஆதரவு கொடுப்பது நம்பிக்கை அளிப்பதாகவும், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் அளவுக்கு தி.மு.க இளைஞரணி செயல்படும் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல்கல் தெரிவிக்கின்றன.