‘எனக்கும் ஜூவாலாக்கும் நீண்ட நாட்களாகப் பழக்கம் உள்ளது’: உண்மையை போட்டுடைத்த விஷ்ணு விஷால்!?

 

‘எனக்கும் ஜூவாலாக்கும் நீண்ட நாட்களாகப் பழக்கம் உள்ளது’: உண்மையை போட்டுடைத்த விஷ்ணு விஷால்!?

நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா குட்டாவுடன் நீண்ட நாட்களாகப் பழக்கம் உள்ளதாகப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா குட்டாவுடன் நீண்ட நாட்களாகப் பழக்கம் உள்ளதாகப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு எண்ட்ரி கொடுத்தவர் நடிகர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துத்திருந்தாலும் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ராட்சசன் படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. தற்போது இவர்  இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி படத்தில் நடித்து வருகிறார். 

இதனிடையே இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது தோழி ரஜினியை  திருமணம் கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஒரு மகன் இருக்கிறான். சமீபத்தில் இவர்களுக்கு இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்  விவாகரத்து செய்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

vishnu

அதைக்கேட்ட பலரும் ‘ராட்சசன்’ படத்தில் ஜோடியாக நடித்த அமலாபாலும் அவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் வதந்தி பரப்ப ஆரம்பித்தனர். ஆனால் இதனை விஷ்ணு விஷால் மறுத்துவிட்டார். 

இந்தநிலையில் சமீபத்தில் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் இருக்கும் ‘செல்பி’ படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதை பார்த்த நெட்டிசன்கள் இந்த புகைப்படத்திற்கு என்ன அர்த்தம்? நீங்கள் இவரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்களா? இதனால் தான் உங்கள் மனைவியை விவாகரத்து செய்து விட்டீர்களா? என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 

vishnu

தற்போது விஷ்ணு விஷால் இது குறித்த பிரபல ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அதில் ‘நீண்ட நாள்களாக இருவரும் இடையே நல்ல பழக்கம் உள்ளது. இருவருக்கும் பொதுவான நண்பர்கள் பலர் உள்ளனர். எனவே நண்பர்களுடன் சேர்ந்து நேரத்தைச் செலவிடுவோம். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும். இதற்கு மேல் இப்போது எதுவும் கூறமுடியாது. எங்களுக்கு நிறையப் பொறுப்புகள் உள்ளது’ என்று கூறியுள்ளார்.