“எந்நேரமும் யாருகிட்ட போன் பேசுறே ,போன கொடு “-மறுத்த மனைவியை அறுத்த கணவன் 

 

“எந்நேரமும் யாருகிட்ட போன் பேசுறே ,போன கொடு “-மறுத்த மனைவியை அறுத்த கணவன் 

ஞாயிற்றுக்கிழமை இரவு செம்பூரில் MHADA காலனியில் ஜேம்ஸ் ஜான் குர்ராயா என்பவர் குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி ரபியா ஜேம்ஸ் குர்ரையா (45) செல் போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். அதனால் கோபமுற்ற அவர் தனது மனைவியிடம் மொபைல் போனை தன்னிடம் கொடுக்குமாறு கேட்டதற்கு ரபியா போனை தர மறுத்துள்ளார்.

கணவன் வீட்டிற்கு வரும்போது செல்போனில் பேசிக்கொண்டிருந்த மனைவியிடம் போனை கேட்டதற்கு தர மறுத்ததால் கணவன் அவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை இரவு செம்பூரில் MHADA காலனியில் ஜேம்ஸ் ஜான் குர்ராயா என்பவர் குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி ரபியா ஜேம்ஸ் குர்ரையா (45) செல் போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். அதனால் கோபமுற்ற அவர் தனது மனைவியிடம் மொபைல் போனை தன்னிடம் கொடுக்குமாறு கேட்டதற்கு ரபியா போனை தர மறுத்துள்ளார். இதனால் கோபமுற்ற அவர் சமையலறைக்குள் சென்று அங்கிருந்த ஒரு கத்தியை எடுத்து தனது மனைவியை கடுமையாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமுற்று கத்திய அவரை அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தூக்கிச்சென்று அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரின் உயிர் போகும் வழியிலேயே பிரிந்து போனது.
இறந்த அந்த பெண்மணி அவருக்கு இரண்டாவது மனைவியாவார். ,ஏற்கனவே அவரின் மற்றொரு மனைவி அருகிலுள்ள பகுதியில் வசிக்கிறார். இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜான் குர்ராயாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.