எந்த கட்சிங்குறது முக்கியமல்ல, மக்கள் நலன் தான் முக்கியம் – சீமான்
ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி குறை கூறுவதை விட்டுவிட்டு மக்கள் நலப்பணிகளில் அக்கறை செலுத்தவேண்டும்.கேரளாவில் ராகுல் கூறியது போல் எந்தக்கட்சியாக இருந்தாலும் மக்கள் நலன் தான் முக்கியம்
கேரளாவில் ராகுல் கூறியது போல் எந்தக்கட்சியாக இருந்தாலும் மக்கள் நலன் தான் முக்கியம் என்ற நிலைப் பாட்டில் இங்குள்ள கட்சிகள் செயல் பட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
. உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “
நீலகிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
நீர்நிலைகள் முறையாக தூர்வாரி இருந்தால் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்காது. நீலகிரியில் உள்ள பல விளை நிலங்களில் குத்தகை அடிப்படையில் பலர் விவசாயம் செய்வதால் நன்கு விசாரித்து குத்தகைதாரர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமே ஒழிய நில உரிமையாளர்களுக்கு அந்த தொகை சென்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி குறை கூறுவதை விட்டுவிட்டு மக்கள் நலப்பணிகளில் அக்கறை செலுத்தவேண்டும்.கேரளாவில் ராகுல் கூறியது போல் எந்தக்கட்சியாக இருந்தாலும் மக்கள் நலன் தான் முக்கியம் என்ற நிலைப் பாட்டில் இங்குள்ள கட்சிகள் செயல் பட வேண்டும்” என்றார்.