எந்தெந்த தெய்வத்திற்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்?அர்ச்சனை பூக்களின் அருமைகள்!

 

எந்தெந்த தெய்வத்திற்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்?அர்ச்சனை பூக்களின் அருமைகள்!

கோயில்களில் பயன்படுத்தப்படும் மலர்களின் மகத்துவங்கள் பற்றியும் அதன் மேன்மைகள் பற்றியும் பார்போம்.

இறை வழிபாடு மனிதனிடம் என்று தோன்றியதோ அன்றே இறைவனுக்கு மலர்களை படைத்து வழிபடும் பழக்கமும் தோன்றி விட்டது.

flowers1

சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் இறைவனுக்கு விதம், விதமான மலர்களை சூடி அழகு பார்த்ததுடன் அந்த மலர்களை கொண்டுஅர்ச்சனையும்  செய்தனர். இதை பழங்கால பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இறை மூர்த்தங்கள் மலர்கள் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதில் நம் மூதாதையர்கள் உறுதியுடன் இருந்தனர். இதன் காரணமாகவே
ஆலயங்கள் அருகே தீர்த்த குளத்தையும், நந்தவனத்தையும் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருந்தனர்.

flowers2

சில குறிப்பிட்ட மலர்கள், அறிவியல் பூர்வமாக மனித குலத்துக்கு நன்மை செய்வதை ஆதி தமிழர்கள் அறிந்து இருந்தனர். 

கோயில்களில் அர்ச்சனைக்கு பயன்படுத்தபடும் பூக்களின் வகைகள் பல்வேறு இருந்தாலும் குறிப்பிட்ட தெய்வத்திற்கு குறிப்பிட்ட பூக்களை மட்டுமே நம் முன்னோர்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதற்காக அவர்கள் கூறுகின்ற விளக்கங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

உலகில் இந்த அளவுக்கு இலைகளையும் பூக்களையும் மரங்களையும், மதத்தில் பயன்படுத்தும் கலாசாரம் வேறு எங்கும் இல்லை. தமிழர்களின் வாழ்வு எந்த அளவுக்கு இயற்கையோடு ஒன்றி இருந்தது என்பதற்கு இது ஒரு சான்று ஆகும்.

flowers2

பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுக்கள், தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்யக்கூடாது என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அரச்சனை செய்த பூக்கள் கோயிலில்  சாமிக்கு போட்ட மாலைகள் காலில் மிதிபடாத வாறு போட வேண்டும். முடிந்தால் தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி போட்டு மூடிவிடலாம்.

flowers4

கோயிலில் சாமிக்கு போட்ட மாலைகளை வாகனங்களில் முன்பக்கம் கட்டுவது மிகபெரிய சாபம். இதனால் தீமைகள் மட்டுமே உண்டாகும் நன்மைகள் கிடைக்காது. என்றும் நம் முன்னோர்கள் பல்வேறு நூல்களில் தெரிவித்துள்ளனர்.

1. அல்லிப்பூ – செல்வம்  பெருகும். 

2. பூவரசம்பூ – உடல் நலம் பெருகும்

3. வாடமல்லி – மரணபயம் நீங்கும்

4. மல்லிகை – குடும்ப அமைதி.

5. செம்பருத்தி -ஆன்ம பலம் உண்டாகும். 

6. காசாம் பூ – நன்மைகள் பெருகும்.

7. அரளிப்பூ  – கடன்கள் நீங்கும்

8. அலரிப்பூ – இன்பமான வாழ்க்கை கிடைக்கும்

9. செம்பருத்தி -ஆன்ம பலம் பெருகும்.

10. ஆவாரம் பூ – நினைவாற்றல் பெருகும் .

11. கொடிரோஜா -குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

12. ரோஜா பூ – நினைத்தது  நடக்கும்.

13. மரிக்கொழுந்து -குலதெய்வம் அருள் உண்டாகும்.

flowers7

14. சம்பங்கி – இடமாற்றம் கிடைக்கும்

15. செம்பருத்தி பூ – நோயற்ற வாழ்வு உண்டாகும் .

16. நந்தியாவட்டை – குழந்தைகள் குறை நீங்கும்

17. சங்குப்பூ (வெள்ளை) – சிவப்பூஜைக்கு சிறந்தது.

18. சங்குப்பூ (நீலம்)  விஷ்ணு பூஜைக்கு சிறந்தது.

19. மனோரஞ்சிதம் -குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

20. தேவ ஆகர்ணம் தாமரைப்பூ – செல்வம் பெருகும் ,அறிவு வளர்ச்சி கிடைக்கும்.

21. நாகலிங்கப்பூ –  லட்சுமி கடாட்சம், ஆரோக்கியம் மேலோங்கும்.

22. முல்லை பூ  – தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்.

23. பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ) – முன்னேற்றம் பெருகும்.

24. தங்க அரளி (மஞ்சள் பூ) – குருவின் அருள் ,பெண்களுக்கு மாங்கல்ய பலம் உண்டாகும். கடன்கள் நீங்கும்,கிரக பீடை நீங்கும்.

25. பவள மல்லி – இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன் மூலம் தேவர்களினதும், ரிஷிகளினதும் அருளும், ஆசியும் கிடைக்கும்.

flowers2

கோயில்களில் பூஜைக்கு பயன்படுத்தும் சிறப்பான பூக்கள் :

1. திருமாலுக்கு — பவளமல்லி ,மரிக்கொழுந்து,துளசி. 

2. சிவன் — வில்வம்,செவ்வரளி.

3. முருகன் — முல்லை, செவ்வந்தி, ரோஜா.

4. அம்பாளுக்கு — வெள்ளை நிறப்பூக்கள் ஆகியவை பூஜைக்கு சிறப்பானவையாகும்.
 

எந்தெந்த தெய்வத்திற்கு எந்தெந்த பூக்களை பயன்படுத்த கூடாது :

1.விநாயகருக்கு  — துளசி.   

2.சிவனுக்கு  — தாழம்பூ.  

3.அம்பாளுக்கு — அருகம்புல்.

4.பெருமாளிற்கு — அருகம்புல்.
 
5. பைரவர் — நந்தியாவட்டை.

6. சூரியனுக்கு — வில்வம்.