எதை பேசுகிறோம் என ஸ்டாலினுக்கே தெரியவில்லை: தமிழிசை விளாசல்

 

எதை பேசுகிறோம் என ஸ்டாலினுக்கே தெரியவில்லை: தமிழிசை விளாசல்

எதை பேசுகிறோம் என மு.க.ஸ்டாலினுக்கே தெரியவில்லை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

திருப்பூர்: எதை பேசுகிறோம் என மு.க.ஸ்டாலினுக்கே தெரியவில்லை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவதே நல்லது என்றும், போராடும் அரசு ஊழியர்கள் தமிழக வளர்ச்சியை கருத்தில் கொள்ள வேண்டும். ஸ்டாலின் நிலை தடுமாறி பேசுகிறார்; ஆறுமுகசாமி ஆணையத்தில் மோடியை விசாரிக்க சொல்கிறார், எதை பேசுகிறோம் என்று ஸ்டாலினுக்கே தெரியவில்லை

எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கி செயல் வடிவம் பெற குறைந்தது 4 ஆண்டுகளாகும். இப்படிப்பட்ட நடைமுறை அறிவாற்றல் இல்லாத மு.க.ஸ்டாலின் பிரதமரை முட்டாள் என்கிறார் என பேசினார்.