“எதை குடித்தால் போதை வருமென்று ஆராய்ச்சி செய்த இளைஞர்கள்”-கண்டதை குடித்து பலியான பரிதாபம் ..

 

“எதை குடித்தால் போதை வருமென்று ஆராய்ச்சி செய்த இளைஞர்கள்”-கண்டதை குடித்து பலியான பரிதாபம் ..

கொல்கத்தாவின் கிழக்கு மிட்னாபூர் பகுதியில் சனிக்கிழமை மது கிடைக்காத  விரக்தியில் ஒரு மெடிக்கலில் விற்ற போதைக்கான ஒரு திரவத்தை வாங்கி குடித்த இருவர் உயிரிழந்தனர். நான்கு பேர் அந்த ஹோமியோபதி கடையில் விற்கப்பட்ட திரவத்தினை வாங்கி குடித்துள்ளார்கள்.

கொல்கத்தாவின் கிழக்கு மிட்னாபூர் பகுதியில் சனிக்கிழமை மது கிடைக்காத  விரக்தியில் ஒரு மெடிக்கலில் விற்ற போதைக்கான ஒரு திரவத்தை வாங்கி குடித்த இருவர் உயிரிழந்தனர். நான்கு பேர் அந்த ஹோமியோபதி கடையில் விற்கப்பட்ட திரவத்தினை வாங்கி குடித்துள்ளார்கள். அதில் இருவர் இறந்த நிலையில், அதை அருந்திய மேலும் இருவர் ஆபத்தான நிலையில் கான்டாய்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி கூறப்படுவதாவது :வெள்ளிக்கிழமை,சிலாபார் கிராமத்தில் வசிக்கும் பாரத் தாஸ், பங்கஜ் தாஸ் ,அங்ஷு தாஸ் மற்றும் கவுதம் தாஸ் ஆகிய நான்கு இளைஞர்களும் மரிஷ்டா சந்தையில் அமைந்துள்ள ஹோமியோபதி மருந்து கடைக்குச் சென்று ஒரு  போதை திரவத்தை வாங்கினர். அந்த திரவத்தை உட்கொண்ட பிறகு, நான்கு பேரும் தூங்கிவிட்டு சனிக்கிழமை தாமதமாக எழுந்தனர்.தூங்கி  எழுந்ததும் அவர்களின் உடல்நிலை மோசமடைந்ததால் ,அவர்களை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர் .அங்கு பாரத் தாஸ் , பங்கஜ் தாஸ்  இறந்தார்கள் .மேலும் அங்ஷு தாஸ் மற்றும் கவுதம் தாஸ்க்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .