எது திராவிட அரசியல்? எச்.ராஜாவின் செய்தியான ட்விட் மீண்டும் ட்விட் ஆனது!

 

எது திராவிட அரசியல்? எச்.ராஜாவின் செய்தியான ட்விட் மீண்டும் ட்விட் ஆனது!

எச்.ராஜா திராவிட அரசியல் என்பது என்று சில ட்வீட்களை கடந்த டிசம்பர் 2ம் தேதி வெளியிட்டிருந்தார். அதைத் தொகுத்து நாளிதழ் ஒன்ற பாக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதை மீண்டும் ட்வீட்டாக எச்.ராஜா பகிர்ந்துள்ளார்.
அதில், “லட்சக்கணக்கான கோடிகளை சேர்த்து வைத்து, ஊழலை நடமாட விடமாட்டோம் என்பது, ஹிந்து மத நம்பிக்கைகளை கேலப்படுத்தி பேசியபடி கிறிஸ்தவ, இஸ்லாமிய மத கூட்டங்களில் பங்கேற்பது.

எச்.ராஜா திராவிட அரசியல் என்பது என்று சில ட்வீட்களை கடந்த டிசம்பர் 2ம் தேதி வெளியிட்டிருந்தார். அதைத் தொகுத்து நாளிதழ் ஒன்ற பாக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதை மீண்டும் ட்வீட்டாக எச்.ராஜா பகிர்ந்துள்ளார்.
அதில், “லட்சக்கணக்கான கோடிகளை சேர்த்து வைத்து, ஊழலை நடமாட விடமாட்டோம் என்பது, ஹிந்து மத நம்பிக்கைகளை கேலப்படுத்தி பேசியபடி கிறிஸ்தவ, இஸ்லாமிய மத கூட்டங்களில் பங்கேற்பது. சாராய ஆலை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூட சொல்வது. ஹிந்தி கற்றத்தரும் பள்ளிகளை நடத்தியடி, ஹிந்தியை எதிர்ப்பது…

h raja

தன்னுடைய குழந்தைகளை பல லட்சங்களை கட்டி பள்ளிகளில் படிக்க வைத்துவிட்டு, அதே கல்வியை கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும் நவோதயாவை எதிர்ப்பது திராவிட அரசியல்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ஆதரவு, எதிர்ப்பு கமெண்ட்கள் பல கிடைத்துள்ளது. ஒருவர், “எல்லோரும் இந்து என்று சொல்லி கொண்டே பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு உங்களுக்கு மட்டும் இடஓதுக்கீட்டை வைத்துக்கொள்வது எப்படி விளக்குவிங்களா?” என்ற கேள்வி எழுப்பியிருந்தார்.
மற்றொருவர், “திராவிடத்தை எதிர்த்துக்கொண்டே மக கல்யாணத்திற்கு அவர்களை வரவழைத்து மொய் வாங்குவதும்… இதையும் சேர்த்துக்கங்க” என்று பதிவிட்டுள்ளார்.

“இத்தகைய திராவிட ஏமாற்றுப் பேர்வழிகள் யாராயினும் பாசகவில் இணைந்துவிட்டால் ஆயுட்கால பரிசுத்தவான்களாகிவிடுவார்கள்.
அல்லது குறைந்தபட்சம் பாசகவுடன் கூட்டணி அமைத்தார்களென்றால்கூட ஒப்பந்த காலத்திற்குப் பரிசுத்தமானவர்களாக ஆகிக்கொள்ளும் வாய்ப்பு அந்த ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு கிடைக்கும்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.