‘எதிர்ப்பை சமாளிக்க கேஸ்டர் ஆயில் குடியுங்கள்’: வடிவேலு பாணியில் நித்தியானந்தாவின் புதிய வீடியோ!
தினசரி உபதேசங்களைத் தினமும் யூட்யூப் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் சத்சங்கத்தில் பேசி வருகிறார்.
நித்தியானந்தாவை இருக்குமிடத்தைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய பெங்களூரு காவல்துறைக்குக் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட கெடு இன்றோடு முடிகிறது. இருப்பினும் அதையெல்லாம் கண்டு நித்தி அஞ்சுவதாக இல்லை. வழக்கம்போல் நித்தியானந்தா தினசரி உபதேசங்களைத் தினமும் யூட்யூப் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் சத்சங்கத்தில் பேசி வருகிறார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பேசிய நித்தியானந்தா,’ எதிர்ப்புகளைச் சமாளிக்க உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். மாறாக கேஸ்டர் ஆயில் குடிக்கவேண்டும் என்று அறிவுரை கூறினார். என்மீது கோபமாக உள்ளவர்களிடமிருந்து என்னை காப்பாற்றிக்கொள்ளவே நான் கைலாசாவை அமைத்துள்ளேன். ஆகாயத்தில் உள்ள கடவுளின் பதிவை உங்களிடம் படித்து காட்டும் போது அது தங்க நிறத்தில் உள்ளது’ என்று கூறி சீடர்களிடம் கைதட்டுகளை பெற்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘வழக்கமாக என்னை எப்போதாவது தான் வைச்சு செய்வார்கள் ஆனால், சமீபமாக தொடர்ந்து கடுமையாகச் சிலர் விமர்சித்துவருகிறார்கள். அதாவது வடிவேலு பாணியில் சொன்னால் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான் ரொம்ப நல்லவன்னு சொல்றாங்க’ என்று பேசியுள்ளார்.