எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி நிலையாக இருக்காது: மோடி விமர்சனம்!

 

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி நிலையாக இருக்காது: மோடி விமர்சனம்!

நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஊழல் கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைத்திருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

புதுதில்லி: நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஊழல் கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைத்திருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

கோவாவைச் சேர்ந்த பாரதிய ஜனதா வாக்குச்சாவடி மட்டத்திலான தொண்டர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது, ‘எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி எதிர்மறையானது . எதிர்க்கட்சிகளிடம் பணபலம் உள்ளது, ஆனால் பாரதிய ஜனதா கட்சியிடம் மக்கள் பலம் உள்ளது. எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி நிலையாக இருக்காது. பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு எதிர்க்கட்சியினரின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது. இதனால் பொய்களையும், வதந்திகளையும் எதிர்க்கட்சியினர் பரப்பி வருவதாக’ குற்றம்சாட்டினார்.

முன்னதாக, மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. பாஜகவுக்கு எதிரான கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெறும் மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுப் பேசியது குறிப்பிடத்தக்கது.