எதிரியாக இருந்தாலும் பாராட்டுகிறோம்: டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு பாராட்டு

 

எதிரியாக இருந்தாலும் பாராட்டுகிறோம்: டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு பாராட்டு

கஜா புயலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக அரசு எதிரியாக இருந்தாலும் நாங்கள் பாராட்டுகிறோம் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினககரன் கூறியுள்ளார்.

வேலூர்: கஜா புயலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக அரசு எதிரியாக இருந்தாலும் நாங்கள் பாராட்டுகிறோம் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினககரன் கூறியுள்ளார்.

கஜா புயல் வேதாரண்யத்தில் இன்று கரையை கடந்தது. இதனால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி தனி தீவாகி உள்ளன. மேற்கூறிய மாவட்டங்களில் மின்சாரம், தொலைதொடர்பு ஆகியவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே கஜா புயலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட்ட தமிழக அரசை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தமிழக அரசை பாராட்டியுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற அமமுக உண்ணாவிரதத்தில் பங்கேற்ற டிடிவி தினகரன் பேசுகையில், எதிரியாக இருந்தாலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக அரசை பாராட்டுகிறோம் என்றார்.