எண்ட்ரீ கொடுக்கிறார் ரிஷப் பண்ட்; முதலில் பேட்டிங் செய்கிறது இங்கிலாந்து !

 

எண்ட்ரீ கொடுக்கிறார் ரிஷப் பண்ட்; முதலில் பேட்டிங் செய்கிறது இங்கிலாந்து !

இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ல இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. 

இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ல இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. 

இங்கிலாந்தின் பிரிமின்கேமில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டனான இயான் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்த போட்டிக்கான இந்திய அணியில் இருந்து விஜய் சங்கர் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். 

 

இதே போல் இங்கிலாந்து அணியும் இரண்டு மாற்றத்துடன் களமிறங்குகிறது. மொய்ன் அலிக்கு பதிலாக லியாம் ப்ளங்கட் அணியில் இடம்பெற்றுள்ளார், அதே போல் ஜேசன் ராயும் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். 

இந்திய அணி; 
கே.எல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ரிஷப் பண்ட், கேதர் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்

இங்கிலாந்து அணி; 
ஜேசன் ராய், ஜானி பாரிஸ்டோவ், ஜோ ரூட், இயான் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், கிரிஸ் வோக்ஸ், அடில் ரசீத், லியாம் ப்ளங்கட், ஜோஃப்ரா ஆர்சர், மார்க் வுட்.