எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து: ராமதாஸ் கடும் கண்டனம்

 

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து: ராமதாஸ் கடும் கண்டனம்

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்வதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது என பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

சென்னை: எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்வதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது என பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்படுகிறது என்று பலரும் குற்றம்சாட்டி வந்தனர். அதனால் கட்டாய இலவசக் கல்விச் சட்டத்தில் திருத்தம் செய்ய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, 5 முதல் 8-ம் வகுப்புகளில் ஆண்டு இறுதியில் நடைபெறும் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு வாய்ப்பு ஒன்று வழங்கப்படும். அதிலும் தேர்ச்சி அடையாவிட்டால் அதே வகுப்பிலேயே மீண்டும் படிக்க வேண்டும். அதேநேரம் இந்த விவகாரத்தில் மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்வதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது என பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்வதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரையிலான தேர்வுகளில் தோற்று படிப்பை நிறுத்தினால் அதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.