எடப்பாடி மீது கடுங்கோபம்… அன்புமணி ராமதாஸுக்காக மனம் மாறிய ஓ.பி.எஸ்..!

 

எடப்பாடி மீது கடுங்கோபம்… அன்புமணி ராமதாஸுக்காக மனம் மாறிய ஓ.பி.எஸ்..!

வேட்புமனு தாக்கலின்போது பாமக தலைவர் வருகிறார் என்பதால் மரியாதை நிமித்தமாக அன்று வந்தேன். அதில் அரசியல் செய்யக் கூடாது என்று நினைத்தேன்.

அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை தேர்தலில் எம்பிக்களாக முகமது ஜான், சந்திரசேகர் மற்றும் கூட்டணி கட்சியான பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். eps

தேர்வான மூன்று பேர் கோட்டையில் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். வேட்புமனு தாக்கலின்போது உடன் இருந்த ஓ.பி.எஸுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாம்.  ஆனால் அவர் வேட்பாளர்கள் தேர்வில் எனக்கு அதிருப்தி… தமிழகத்தின் வடமாவட்டத்தில் ஒருவருக்கும் தென் மாவட்டத்தில் ஒருவருக்கும் கொடுக்காமல் அருகருகில் உள்ள வேலூர், சேலம் மாவட்டக்காரர்களுக்கு கொடுத்தது தவறு.ops

வேட்புமனு தாக்கலின்போது பாமக தலைவர் வருகிறார் என்பதால் மரியாதை நிமித்தமாக அன்று வந்தேன். அதில் அரசியல் செய்யக் கூடாது என்று நினைத்தேன். ஆனால், இப்போது அப்படி அல்ல. எனக்கு பிடிக்காதவர்கள் வெற்றி  பெற்றுள்ளனர். அவர்களை வாழ்த்தினால் என் ஆதரவாளர்கள் கோபித்து கொள்வார்கள் என்பதால் நான் எடப்பாடியுடன்  இணைந்து சந்திப்பதை தவிர்த்துவிட்டேன் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

OPS

ஆனால், அன்புமணி ராமதாஸை மட்டும்  ஓ.பன்னீர்செல்வம்  சந்தித்து வாழ்த்து கூறி இருக்கிறார்.