எடப்பாடி புரட்சி பெருந்தகையல்ல… பெருந்தொகை!!- சாடும் டிடிவி தினகரன் 

 

எடப்பாடி புரட்சி பெருந்தகையல்ல… பெருந்தொகை!!- சாடும் டிடிவி தினகரன் 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போது புரட்சி பெருந்தகை என பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை புரட்சி பெரும் தொகை என வைத்துக்கொண்டால் சரியாகவும், பொருத்தமானதாகவும் இருக்கும்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போது புரட்சி பெருந்தகை என பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை புரட்சி பெரும் தொகை என வைத்துக்கொண்டால் சரியாகவும், பொருத்தமானதாகவும் இருக்கும் எனஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “ அதிமுகவில் இருந்து எத்தனை பேர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வருவார்கள் என்பது இன்னும் எட்டு நாட்களில் தெரியும். மக்கள் எண்ணம் என்ன என்பது 23 ஆம் தேதிக்கு பிறகு தெரியும். ஆட்சி அமைப்பது திமுகவின் ஆசையாக இருக்கலாம். ஆனால் நிறைவேறுவதற்கு வாய்ப்பே கிடையாது. திமுக ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு கொடுக்க மாட்டோம். 

பணம் கொடுத்தால் தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்பதில் உண்மை இல்லை. எந்த மதமும், அந்த மதத்தினரை தீவிரவாதியாக மாற சொல்வதில்லை. எந்த ஒரு மதத்தையும் இழிவுபடுத்தி பேசினால் அது தவறுதான்” எனக் கூறினார்.