எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்தது ஊழல் மட்டும்தான்! – துரைமுருகன் தாக்கு

 

எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்தது ஊழல் மட்டும்தான்! – துரைமுருகன் தாக்கு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு குடியுரிமை திருத்த சட்டம் எல்லாம் தெரியாது… அவருக்குத் தெரிந்தது எல்லாம் ஊழல் மட்டும்தான் என்று தி.மு.க மூத்த தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு குடியுரிமை திருத்த சட்டம் எல்லாம் தெரியாது… அவருக்குத் தெரிந்தது எல்லாம் ஊழல் மட்டும்தான் என்று தி.மு.க மூத்த தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் பங்கேற்றார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

durai

“சிறுபான்மையினரை பாதிக்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டம் அமைந்துள்து. சிறுபான்மை சமுதாயத்திற்கு எதிரான மிகப்பெரிய மிருகபலத்தைக் கொண்டு பா.ஜ.க சர்வாதிகார போக்கில் இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத எடப்பாடி பழனிசாமியும் இதற்கு ஆதரவு அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு குடியுரிமை திருத்த சட்டம் என்றால் என்ன என்றே தெரியாது. அவருக்குத் தெரிந்தது எல்லாம் ஊழல் மட்டும்தான்.

durai murugan

இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் தமிழர்கள் அந்நியர்களாகவே கருதப்படுவார்கள் என்று பா.ஜ.க சொல்லியுள்ளது. தமிழர்கள் இந்த நாட்டிற்காக பாடுபடவில்லையா? தீண்டத்தகாதவர்களாக ஏன் அமித்ஷா கருதுகிறார்? தி.மு.க இளைஞர்களை அடக்கும் சக்தி இந்த அரசுக்கு கிடையாது. பா.ஜ.க அரசின் வீழ்ச்சிக்கு இந்த சட்டம் அடிகோலும். உள்ளாட்சித் தேர்தலில் இந்த அரசுக்கும் அ.தி.மு.க-வுக்கும் மக்கள் சரியான பாடத்தைக் கற்பிப்பார்கள்” என்றார். 
முன்னதாக, சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி பங்கேற்று கைதானது குறிப்பிடத்தக்கது.