எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓட்டுப் போட்டது ஏன் என்று விளக்க அவகாசம் வேண்டும்! – சபாநாயகருக்கு ஓ.பி.எஸ் கடிதம்

 

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓட்டுப் போட்டது ஏன் என்று விளக்க அவகாசம் வேண்டும்! – சபாநாயகருக்கு ஓ.பி.எஸ் கடிதம்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் அமைதியான முறையில் முதல்வராக பதவி ஏற்றார். அதன்பிறகு சசிகலா முதல்வராக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், நெருக்கடி காரணமாக பதவியை ராஜினாமா செய்ததாக தர்மயுத்தம் நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் 10 எம்.எல்.ஏ-க்கள் இணைந்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தது ஏன் என்று விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் அமைதியான முறையில் முதல்வராக பதவி ஏற்றார். அதன்பிறகு சசிகலா முதல்வராக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், நெருக்கடி காரணமாக பதவியை ராஜினாமா செய்ததாக தர்மயுத்தம் நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் 10 எம்.எல்.ஏ-க்கள் இணைந்தனர்.

ops-89

சசிகலா முதல்வராக முடியாத நிலையில் எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக ஆக்கப்பட்டார். கூவத்தூரில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் அனைவரும் அறிந்ததே. அதைத் தொடர்ந்து 2017ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது அதிமுக கொறடா உத்தரவையும் மீறி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

eps-09

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக செயல்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தி.மு.க தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை பல மாதங்கள் விசாரித்த நீதிமன்றம் இது பற்றி சபாநாயகர் முடிவு எடுக்கலாம் என்று கூறி வழக்கை முடித்துவைத்தனர். இதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கு விளக்கம் அளிக்க ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களும் சபாநாயகர் தனபாலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.