எடப்பாடி நீக்கப்போகும் அடுத்த அமைச்சர்… அலறும் அதிமுக நிர்வாகிகள்..!

 

எடப்பாடி நீக்கப்போகும் அடுத்த அமைச்சர்… அலறும் அதிமுக நிர்வாகிகள்..!

. ஆக மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று திரும்பியதும் பல அதிரடி வேலைகள் நடக்கப்போவது உறுதி என்கிறார்கள்.

எடப்பாடி நீக்கப்போகும் அடுத்த அமைச்சர்… அலறும் அதிமுக நிர்வாகிகள்..!

கட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ளும் மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முக்கிய அதிமுக நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி அமைச்சருக்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அழுத்தமாக முதல்வரிடம் பதிவு செய்துள்ளதாக தொண்டர்கள் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் மாவட்ட செயலாளரின் விசுவாசிகள், உங்கள் அமைச்சரின் பதவியை பறிப்பதற்கான வேலைகளை எங்கள் தலைவர் துவக்கி வைத்து விட்டார். சமீபத்தில் அமைச்சர் மணிகண்டன் பதவியை பறித்தது போல் தற்போது திருச்சியில் வெல்லமண்டி நடராஜனின் அமைச்சர் பதவியை பறிக்கும் நாள் விரைவில் வரும் என கூறி கொக்கரிக்கிறார்கள். 

திருச்சி மாநகரில் அதிமுகவில் உட்கட்சி பூசல் வெளிப்படையாக துவங்கி நடப்பதை கட்சியினரும், பொதுமக்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றார்கள். ஆக மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று திரும்பியதும் பல அதிரடி வேலைகள் நடக்கப்போவது உறுதி என்கிறார்கள்.