எடப்பாடி அரசுக்கு எதிராக ஏன் வாக்களித்தீர்கள்? ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

 

எடப்பாடி அரசுக்கு எதிராக ஏன் வாக்களித்தீர்கள்? ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

மனுவை விசாரித்த நீதிமன்றம்  11 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய முடியாது என்று கூறியது. 

ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது.

ஆனால் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதுகுறித்து திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம்  11 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய முடியாது என்று கூறியது. 

இதனை எதிர்த்து திமுக சார்பில் கொறடா சக்கரபாணி, தங்க தமிழ்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு கடந்த 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கில் 3 ஆண்டுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்  என்று சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.  மேலும் திமுக மனு மீது சபாநாயகர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க உத்தரவிட்டனர். 

 

ttn

இந்த வழக்கை கடந்த மாதம் 14 ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி, சபாநாயகர் தனபால் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் அதை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தார். 

இந்நிலையில், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால், ‘ எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஏன் வாக்களித்தீர்கள்’ என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.