எடப்பாடியை நினைத்து கண்ணீர் வடிக்கும் காக்கிகள்… வெளிநாடு திரும்பியதும் அதிர்ச்சி..!

 

எடப்பாடியை நினைத்து கண்ணீர் வடிக்கும் காக்கிகள்… வெளிநாடு திரும்பியதும் அதிர்ச்சி..!

சேலம் மாவட்டத்து காவல்துறையினர் சரியாக தூங்கி இரண்டு ஆண்டுகளாகி விட்டதாக புலம்பி வருகிறார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி வருகையை நினைத்து தொடர்ந்து புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.  அதிலும், சமீப காலமாக எடப்பாடி  வந்து விட்டால், அனைவரையும் கால்கடுக்க ரோட்டில் நிற்க விடுகிறார்கள் என போலீஸ்காரர்கள் முதல் கொண்டு அதிகாரிகள் வரை புலம்பித் தள்ளுகிறார்கள்.

அத்திவரதர் பாதுகாப்பை முடித்ததும், ஒரு வாரத்திற்கு சேலம் நகருக்கு வந்த எடப்பாடி பாதுகாப்பு பணியை முடித்தோம். தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு வழங்கி வருகிறோம். இந்நிலையில், இன்னும் 7  நாட்களில் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, நேரடியாக சேலம் நகருக்கு எடப்பாடி வருகிற தகவல் வெளியாகி இருப்பதால், இந்த ஊரை விட்டு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போயிடலாமா? என்கிற அளவுக்கு விரக்தியாகி கிடக்கிறோம்’’ என்கிறார்கள். edappadi

அதுவும் 11ம் தேதி சேலத்திற்கு வந்து, ஒரு வாரம் எடப்பாடி இருக்க போகிறாராம் என அதிகாரிகள் தெரிவித்திருப்பதால், ஆயுதப்படை காக்கிகள் எல்லாம் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  நமக்கு ஓய்வே கிடையாதா… பேசாம இந்த நகரை விட்டு வேறு இடத்திற்கு போயிடலாம் என தெரிந்த உயர் அதிகாரிகளிடம் டிரான்ஸ்பருக்கு ரெக்கமண்ட் கேட்டுட்டு இருக்காங்களாம் காக்கிகள்.