’எடப்பாடியைத் தூக்கிவிட்டு மிக விரைவில் பழைய பன்னீர்ச் செல்வத்தை முதல்வர் ஆக்குவார் மோடி’-சொல்றவரு யாருன்னு பாருங்க..

 

’எடப்பாடியைத் தூக்கிவிட்டு மிக விரைவில் பழைய பன்னீர்ச் செல்வத்தை முதல்வர் ஆக்குவார் மோடி’-சொல்றவரு யாருன்னு பாருங்க..

’தமிழகத்தில் அ.தி.முக. இனி மோடி சொல்லுக்கு அடங்கித்தான் நடக்கவேண்டும் என்பதால் எடப்பாடி முதல்வர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டு மீண்டும் ஓ.பி.எஸ். முதல்வராக்கப்படுவார்’என்று பத்திரிகைகளுக்கு சூடான செய்தி வங்கியுள்ளார் அமமுகவின் தங்கத் தமிழ்ச்செல்வன்.

’தமிழகத்தில் அ.தி.முக. இனி மோடி சொல்லுக்கு அடங்கித்தான் நடக்கவேண்டும் என்பதால் எடப்பாடி முதல்வர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டு மீண்டும் ஓ.பி.எஸ். முதல்வராக்கப்படுவார்’என்று பத்திரிகைகளுக்கு சூடான செய்தி வங்கியுள்ளார் அமமுகவின் தங்கத் தமிழ்ச்செல்வன்.

tamilselvan

இன்று  தேனியில் செய்தியாளர்களை சந்தித்து  அமமுகவின் தோல்விக்கான காரணங்கள் குறித்துப் பேட்டி அளித்த  தங்க தமிழ்ச்செல்வன், ”தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வெற்றி பெறாமல், நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

o.p.s and e.p.s

தேனி மக்களவைத்தொகுதியில் ஜெயிப்பதற்காக ஓ.பி.எஸ்சும் அவரது மகனும் 500 கோடிக்கு மேல் செலவழ்த்திருக்கிறார்கள்.வறுமையில் உள்ள மக்கள் பணம் வாங்கியதால், தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவிற்கு வாக்களித்துள்ளனர். பணம் பெரியது என்பதால் என் சமூக மக்கள் கூட எனக்கு ஓட்டுப்போடவில்லை.
அதேபோல் பரிசுப்பெட்டி சின்னம் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மகனை மற்றும் வெற்றிபெற வைக்க இவ்வளவு பணம் செலவழித்த ஓபிஎஸ் அடுத்து முதல்வராவதற்காக மோடி மூலம் காயை நகர்த்துவார். இனி மீதமுள்ள ஆட்சிக்காலம் முழுவதும் அதிமுகவினர் மோடியின் காலடியில்தான் வீழ்ந்துகிடக்கவேண்டும் என்பதால் மோடி சொல்வதைக்கேட்டுக்கொண்டு இபிஎஸ் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தே தீரவேண்டும். இது மிக விரைவில் நடக்கும்’என்றார் தங்கத் தமிழ்ச் செல்வன்.