எடப்பாடியின் லண்டன் பயணத்திற்கு போட்டியாக மகனுடன் அமெரிக்கா புறப்பட்டார் ஓபிஎஸ்

 

எடப்பாடியின் லண்டன் பயணத்திற்கு போட்டியாக  மகனுடன் அமெரிக்கா புறப்பட்டார் ஓபிஎஸ்

நேற்றிரவு துணை முதல்வர் ஓபிஎஸ் சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் சென்றுவிட்டு அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார்.

10 நாட்கள்  அரசுமுறை பயணமாகத் துணை முதல்வர் ஓபிஎஸ் அமெரிக்கா புறப்பட்டார்.

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அரசுமுறை பயணமாக 10 நாட்கள் அமெரிக்க செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்றிரவு சென்னையிலிருந்து கிளம்பிய துணை முதல்வர் ஓபிஎஸ் சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் சென்றுவிட்டு அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார். முன்னதாக செல்லூர் ராஜூ, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஓபிஎஸை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். ஓபிஎஸுடன் அவருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும் உடன் சென்றனர்.

பயண விவரங்கள்: 

ops

சிகாகோ, ஹுஸ்டன், வாஷிங்டன் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் சுற்றுப்பயணம் 

ops

நவம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதி 

சிகாகோ நகரில்  மாலை குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மறுநாள் மாலை நடைபெறும் விழாவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு International Rising Star of the year-Asia Award விருது வழங்கப்படவுள்ளது. 

நவம்பர் 12 ஆம் தேதி

 சிகாகோவில் நிறுவனங்கள் தொடர்பான வட்ட மேசை கருத்தரங்கில் கலந்துகொள்கிறார்.

நவம்பர்  13 மற்றும் 14 ஆம் தேதி 

 
வாஷிங்டன் செல்லும் அவர் 14ஆம் தேதி ஹுஸ்டன்  நகரில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தொழில் முனைவோர்கள் மத்தியில்  பேசுகிறார். 

நவம்பர் 15 முதல் 16

 ஹுஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கான Electronics Donor Board-ஐ தொடங்கி வைக்கிறார். மறுநாள்  நியூயார்க் சென்று அமெரிக்கவாழ் தமிழர்களைச்  சந்திக்கிறார்.

17ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.