எஜமானியின் பேச்சைக் கேட்டு குதூகலமாக நடனம் ஆடும் நாய்.. வைரல் வீடியோ !

 

எஜமானியின் பேச்சைக் கேட்டு குதூகலமாக நடனம் ஆடும் நாய்.. வைரல் வீடியோ !

சமீபத்தில் மக்களால் அதிகமாக கவரப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், நாய் ஒன்று அதன் எஜமானியின் பேச்சைக் கேட்டு அவர் நடனம் ஆடுவதைப் போலவே நடனம் ஆடுகிறது. 

அனைவரது வீட்டிலும் நாயைச் செல்ல பிராணியாக வளர்ப்பது வழக்கம். அதற்கு விளையாட்டுக் காட்டுவதும், அவர்கள் பேச்சைக் கேட்டு அப்படியே நடக்க செய்வதுமாக மக்கள் நாய்களை வளர்த்து வருகிறார்கள். நாய் நன்றியுள்ளது என்பதால் சில மக்கள் மனிதர்களை விட அதிகமாகப் பாசத்தை செல்ல பிராணிகள் மீது வைத்திருப்பார்கள். செல்ல பிராணிகள் எஜமானிகளை காப்பாற்றுவதும், கை கொடுப்பதும், தலை மேல் கை வைத்து குட் மார்னிங் சொல்வதும் போன்ற பல வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், சமீபத்தில் மக்களால் அதிகமாக கவரப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், நாய் ஒன்று அதன் எஜமானியின் பேச்சைக் கேட்டு அவர் நடனம் ஆடுவதைப் போலவே நடனம் ஆடுகிறது. 

 

வெளிநாட்டில், வெண்டி பெரெங்குவர் என்னும் பெண்மணி பெய்லி என்ற நாயை வளர்த்து வருகிறார். இவர் பெய்லி என்னும் அந்த நாயின் முன்னால் இடுப்பை வளைத்து நடனம் ஆடி, அதே போல அந்த நாயையும் நடனம் ஆட சொல்லுகிறார்.எஜமானியின் பேச்சைக் கேட்கும் அந்த நாய் அவர் சொல்லுவதை போலவே நடனம் ஆடுகிறது. இந்த விடியோவை வெண்டி பெரெங்குவர், அவரது பேஸ்புக் பக்கத்தில் ” Bailey loves Reggeaton! ” என்று பதிவிட்டு வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணைய தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.