எச்-1பி விசா வைத்துள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஜூன் மாதத்திற்கு பின்பு அமெரிக்காவில் தங்குவதில் சிக்கல்

 

எச்-1பி விசா வைத்துள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஜூன் மாதத்திற்கு பின்பு அமெரிக்காவில் தங்குவதில் சிக்கல்

எச்-1பி விசா வைத்துள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஜூன் மாதத்திற்கு பின்பு அமெரிக்காவில் தங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நியூயார்க்: எச்-1பி விசா வைத்துள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஜூன் மாதத்திற்கு பின்பு அமெரிக்காவில் தங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மனாசி வசாவாடா அமெரிக்காவில் இருப்பதற்கான சட்டப்பூர்வ உரிமையை இழப்பதற்கு மூன்று வாரங்களுக்கும் குறைவாகவே உள்ளது. 31 வயதான வசாவாடா கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நியூ ஜெர்சியிலுள்ள பாசாயிக் கவுண்டியில் பல் மருத்துவத்திற்காக பயிற்சி பெற்று வந்தார். ஆனால் கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து அமெரிக்காவிலிருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் அன்றிலிருந்து அவர் ஊதியம் பெறாத விடுப்பில் இருந்தார்.

ttn

சிறப்பு திறன்களைக் கொண்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட தற்காலிக விசா திட்டமான எச்-1பி விசா மூலம் வசாவடா அமெரிக்காவில் தங்கி வந்தார். எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் ஊதியம் பெறாமல் 60 நாட்கள் மட்டுமே சட்டப்பூர்வமாக அந்த நாட்டில் இருக்க முடியும். அவரது கணவர் நந்தன் புச், ஒரு பல் மருத்துவர், ஜூன் மாதத்தில் காலாவதியாகும் எச்-1பி விசாவுடன் அந்த நாட்டில் இருக்கிறார். அதனால் ஜூன் மாதத்தை நோக்கி அவர்கள் அச்சத்துடன் நாட்களைக் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

விசா காலம் முடிந்ததும் அந்த தம்பதியினர் அமெரிக்காவில் தங்க முடியாத மற்றும் நாட்டை விட்டு செல்ல முடியாத ஒருநிலை விரைவில் வரக்கூடும். ஆனால் அவர்களின் சொந்த நாடான இந்தியா கொரோனா பரவல் காரணமாக தனது எல்லைகளை காலவரையின்றி மூடியுள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் அவர்கள் பட்டம் பெறுவதற்காக மாணவர் 520,000 டாலர் கடனை மொத்தமாக வைத்திருக்கிறார்கள. இந்தியாவில் சம்பாதிக்கும் சம்பளம் மூலம் அந்தக் கடனை திருப்பிச் செலுத்துவது என்பது சாத்தியமற்றது.

வாஷிங்டன் டி.சி. அடிப்படையிலான குடியேற்றக் கொள்கை ஆய்வாளர் ஜெர்மி நியூஃபெல்ட் கருத்துப்படி, அமெரிக்காவில் கிரீன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் 250,000 வெளிநாட்டு தொழிலாளர்களில் 200,000 பேர் எச்-1பி விசாக்களில் வந்துள்ளனர். அவர்கள் தங்கள் சட்டபூர்வமான நிலையை கூடிய விரைவில் இழக்க நேரிடும். மேலும் ஆயிரக்கணக்கானோர் குடியுரிமை பெற விரும்பாதவர்களும் வீடு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடும் என்று அவர் கூறினார். தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் நபர்களுக்கு முக்கால்வாசி எச்-1பி விசாக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சரியான அளவுகள் ஆண்டுதோறும் மாறுபடும்.

கடந்த இரண்டு மாதங்களில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வேலை இழந்து விட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்ட எச்-1பி தொழிலாளர்கள் 60 நாட்களுக்குள் வேறொரு வேலையைக் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் வேறு விசாவிற்கு மாற்ற வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அவர்கள் வேலையை இழக்காவிட்டாலும் கூட, கொரோனா போன்ற இந்த இடையூறு காலங்களில் தொழிலாளர்கள் தங்கள் விசாக்களை புதுப்பிக்க முடியாததால் பெரும் குழப்பத்துடனும், அச்சத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.