எச்சில் சேலையில் அம்பாள்! உலகைக் காக்கும் உலகம்மை!

 

உலகிற்கெல்லாம் படியளக்கும் அம்மையாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கிறாள் உலகம்மை. இந்த தலத்தின்  இறைவன் பாபநாசநாதர். தினந்தோறும் உலகம்மையைக் காணாது, தன் பணியைச் செய்ய சத்தியம் மேற்கொண்டார் அதி தீவிர தேவி பக்தர். உலகம்மை மீதும் பெரும் பக்தியும், பேரன்பும் செலுத்தி வந்தார். அவர் பெயர் நமச்சிவாய கவிராயர். நாள்தோறும் பாபநாசம் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் உலகம்மையை வழிபாடு செய்து வருவது அவருடைய தின வழக்கமாக இருந்து வந்தது. நேரம் காலம் எல்லாம் கிடையாது. எப்போதெல்லாம் நினைக்கிறாரோ… அப்போதெல்லாம் உலகம்மையைப் பார்க்க கிளம்பிவிடுவார். 

எச்சில் சேலையில் அம்பாள்! உலகைக் காக்கும் உலகம்மை!

உலகிற்கெல்லாம் படியளக்கும் அம்மையாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கிறாள் உலகம்மை. இந்த தலத்தின்  இறைவன் பாபநாசநாதர். தினந்தோறும் உலகம்மையைக் காணாது, தன் பணியைச் செய்ய சத்தியம் மேற்கொண்டார் அதி தீவிர தேவி பக்தர். உலகம்மை மீதும் பெரும் பக்தியும், பேரன்பும் செலுத்தி வந்தார். அவர் பெயர் நமச்சிவாய கவிராயர். நாள்தோறும் பாபநாசம் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் உலகம்மையை வழிபாடு செய்து வருவது அவருடைய தின வழக்கமாக இருந்து வந்தது. நேரம் காலம் எல்லாம் கிடையாது. எப்போதெல்லாம் நினைக்கிறாரோ… அப்போதெல்லாம் உலகம்மையைப் பார்க்க கிளம்பிவிடுவார். 

வழக்கம் போல், ஒரு நாள் இரவு நமச்சிவாயர் பாபநாசம் சென்று உலகம்மையைத் தொழுதார். உலகம்மையை வணங்கி விட்டு தனது இல்லத்திற்குத் திரும்பும் போது, அவரது மனம் முழுவதும் உலகம்மையே நிறைந்திருந்தாள். நினைவில் நின்ற உலகம்மையைப் புகழ்ந்து வரும் வழி முழுவதும் கவிதைகளைப் பாடிக்கொண்டே வந்தார். 
தனது பக்தன் தன்னைப் போற்றி பாடும் கவிதையை கேட்கும் ஆவல் கொண்ட உலகம்மை, அர்ச்சகர் அலங்கரித்த அலங்காரத்தோடு, ஆலயத்தில் இருந்து வெளிவந்து,  கவிராயரை பின் தொடர ஆரம்பித்தாள். அம்பிகையை மனதுள் நினைத்துப் பாடிக் கொண்டிருந்த கவிராயர், தன்னைத் தொடர்ந்து வரும் அம்பிக்கையை அறியாமல் மனம் முழுவதும் உமையம்மையை நினைத்தப்படியே பாடல்களைப் பாடிக் கொண்டே வீட்டிற்கு சென்றார். 
வாய் நிறைய வெற்றிலை தரித்து போட்டுக் கொண்டு வாய் விட்டுப் பாடிக் கொண்டிருந்த கவிராயர், மெய் மறந்து பாடிக் கொண்டிருந்ததில், அவரையும் அறியாமல், தெறித்த எச்சில் துளிகள் அவரைத் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்த தேவியின் மேல்பட்டன. சேலையில் எச்சில் பட்டக் கோலத்தோடு பாடலை ரசித்து பின் தொடர்ந்து சென்ற உலகம்மை பாடல் முடிந்ததும் மீண்டும் ஆலயத்திற்கே சென்றாள்.

மறுநாள் காலையில், பூஜைக்காக கோயிலைத் திறந்து பார்த்த அர்ச்சகர், உலகம்மையின் சேலையில் தெரிந்த எச்சில் துளிகளைக் கண்டு திடுக்கிட்டார். அந்த சமயம் இறைவழிபாட்டுக்குப் பாபநாசம் வந்திருந்த அரசனிடம் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. மன்னன் வேதனையுற்றான். உமையவளின் சேலை மீது இந்த படுபாதகத்தை செய்தவன் யார் என அரசன் யோசித்து, அவனுக்கு கடுமையான  தண்டனைத் தர சித்தம் கொண்டான்.
அன்று இரவு அரசனின் கனவில் அசரீரி ஒலித்தது. “விஜயரங்க சொக்கநாதா!  என் மீது கொண்ட பக்தியினால் நமச்சிவாயத்தின் பாடலுக்கு வசப்பட்டு அவனறியாது அவன்பின் சென்றவள் நான் தான். அவன் மீது எந்த தவறும் கிடையாது. எனது கவனக்குறைவாலேயே அவன் துப்பிய எச்சில் என் மீது பட்டது” என்று உலகம்மை எடுத்துரைத்தாள். அம்பிகையின் உத்தரவு கேட்டு அகமகிழ்ந்தான் அரசன். 
அடுத்த நாள் ஆலயத்தில் எல்லோரும் சூழ்ந்தனர். மன்னன் தனது முந்தைய நாள் கனவினை நினைத்துக் கொண்டு, நமச்சிவாய கவிராயரை அழைத்து வரச் சொன்னான். எதையும் தீர விசாரிப்பது தானே மன்னனின் மாண்பு. தான் கனவில் கண்ட கவிராயரின் பக்தியை நேரில் பரிசோதிக்க விரும்பி,  “தாங்கள் அம்பிகை தாசர் என்பது சத்தியமானால், இதோ உலகம்மை கையிலிருக்கும் தங்கப் பூச்செண்டு, தாங்கள் பாடப் பாட அப்பூச்செண்டை சுற்றியிருக்கும் தங்க கயிறுகளை எல்லாம் அறுத்து விட்டு,  இந்த பூச்செண்டு தானாய் உங்கள் கையில் வந்து விழ வேண்டும்!” என்றான் அரசன்.

“உலகம்மை அந்தாதி” எனும் அற்புதமான நூலை இயற்றினார். “அபிராமி அந்தாதி”யைப் போல் அதியற்புதமான நூலாக உலகம்மை அந்தாதி இருந்து வருகிறது. அந்தாதி பாடப்பாட அம்மையின் கரத்திலிருந்த பூச்செண்டின் தங்க நார்கள் அறுந்து ஒவ்வொன்றாய் விழுந்தன.
“விண்டல நின்ற சரற்கால சந்திர சுவேதமுக
மண்டலமும் கையில் மலரொடும் தோளில் வழிந்த ரத்ன 
குண்டலமும் பொலி வாலப் பிராய குமாரத்தியாய்
செண்டலர் செங்கை உலகாள் என் நாவில் சிறந்தவளே”
எனும் பாடலை பாடி முடித்த சமயம் “படபட” வென்று அனைத்து தங்க நாரும் அறுந்து, தங்கச் செண்டு தேவியின் கையிலிருந்து நமச்சிவாயர் கரத்திற்கு தாவி வந்தது. என்ன ஆச்சர்யம்! அரசர் முதற் கொண்டு அனைவரும் நமச்சிவாயர் பாதத்தில் விழுந்தனர். தனது பக்தனின் எச்சிலை ஆடைகளில் ஏந்தி கருணைக் கடவுளாக வீற்றிருக்கும் உலகம்மையை வழிபட்டால், நோய் தீர்ந்து சகல நன்மைகளும் கிடைக்கும்!