எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண் மரணம்: உறவினர்கள் அதிர்ச்சி!

 

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண் மரணம்: உறவினர்கள் அதிர்ச்சி!

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண் மரணம்: உறவினர்கள் அதிர்ச்சி!

நாகப்பட்டினம்:  எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாகப்பட்டினம் செல்லூர் பகுதியைச் சேர்ந்த தங்கதுரையின் மனைவி பழனியம்மாள். பழனியம்மாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து மாரியப்பன் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். மாரியப்பன் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பழனியம்மாள் திடீரென்று  அவரது வீட்டில் இறந்து கிடந்துள்ளார். அவரது தலையில் அடிபட்டும், உடல் பாதி கருகிய  நிலையிலும் இருந்துள்ளது. இதனால் உறவினர்கள் பழனியம்மாளை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகித்து வெளிப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் பழனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த  போலீசார்,  சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.