எங்க வேணா வச்சி காத்து வாங்கிகலாம்… செயற்கை மரம்
Aug 17, 2019, 11:12 IST1566020565000
காற்றை சுத்திகரிக்கக்கூடிய செயற்கை மரங்களை மெக்சிகோவை சேர்ந்த நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.
காற்றை சுத்திகரிக்கக்கூடிய செயற்கை மரங்களை மெக்சிகோவை சேர்ந்த நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.
வீட்டை சுற்றி வளர்க்கப்படும் மரங்கள் காற்றை தூய்மைப்படுத்தி வெயிலின் தாக்கத்தை குறைத்து குளிர்ச்சியான காற்றை தருகின்றனர். ஆனால் இயற்கையான மரங்களை வளர்ப்பதற்கு அதிக நேரமும், இடமும் தேவைப்படுகிறது. இந்த பிரச்னையை போக்குவதற்காக பயோமி டெக் என்ற நிறுவனம் பயோ அர்பன் என்ற பெயரிடப்பட்ட செயற்கையான மரங்களை உருவாக்கியுள்ளது. இந்த மரம், இயற்கை தாவரங்களை போல ஒளிச்சேர்க்கை செய்யும். அதுமட்டுமின்றி 368 இயற்கையான மரங்களுக்கு இணையாக காற்றிலுள்ள கரியமில வாயு போன்ற மாசுக்களை நீக்கும் திறனுடையது என பயோமி டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.