“எங்கள முட்டாள்னு நினைச்சா அதுக்காக உங்கள நினைச்சு வருத்தப்படறேன்” … விஜய் சேதுபதி பேச்சுக்கு காயத்ரி ரகுராம் பதில்
ஜய் சேதுபதி பேசும் பொழுது “நான் வேணுன்னே லேட்டா வரல, திருநெல்வேலி ஷூட்டிங்ல இருந்து வந்தேன்… வதந்திகள் பரவாமல் இருப்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்” என்றார். மேலும் மதங்களின் பெயரால் நடக்கும் வன்முறைகளையும் குறிப்பிட்ட அவர் “மனிதனைக் காப்பாற்ற இன்னொரு மனிதன் தான் வருவான், மேல இருந்து சாமிலா வராது” என்றார்.
கடந்த சில நாட்களாகவே மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்காக அனைவரும் ஆவலுடன் எதிரிபார்த்து காத்திருந்தனர். பல சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்ட மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விஜய் அவரது அம்மாவை கட்டி அரவணைத்தது, விஜய் சேதுபதிக்கு முத்தம் என பல சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்தன. விஜயின் குட்டி ஸ்டாரிக்காக அவரது ரசிகர்கள் காத்துக்கிடந்தனர். ஆனால் அவ்வளவாக பேசாமல் உண்மையாக இருக்கணும்னா சில நேரம் ஊமையா இருக்கணும்னு” பேச்ச சுருக்கமாகவே முடிச்சுக்கிட்டார்.
அடுத்து விஜய் சேதுபதி பேசும் பொழுது “நான் வேணுன்னே லேட்டா வரல, திருநெல்வேலி ஷூட்டிங்ல இருந்து வந்தேன்… வதந்திகள் பரவாமல் இருப்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்” என்றார். மேலும் மதங்களின் பெயரால் நடக்கும் வன்முறைகளையும் குறிப்பிட்ட அவர் “மனிதனைக் காப்பாற்ற இன்னொரு மனிதன் தான் வருவான், மேல இருந்து சாமிலா வராது” என்றார்.
விஜய்சேதுபதியின் இந்த பேச்சுக்கு பதிலளித்திருக்கிறார் நடன இயக்குனர் காயத்திரி ரகுராம்.
அதில் “மற்றொரு மனிதனை நம்பியதற்கு வாழ்த்துக்கள் நண்பா. எந்த நம்பிக்கைகளையும் அழிக்க முடியாது. மதங்கள் உள்ளன என நம்பும் கோடிக்கணக்கான மக்கள் இங்கு உள்ளனர். நாங்கள் அனைவரும் முட்டாள் என நினைத்தால் அதற்காக உங்களை நினைத்து நான் வருந்துகிறேன். வாழ்க்கை கடவுளால் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
Good luck with believing another human nanba. No beliefs can destroyed. There are crores of believers (all religion) and if you think we all are dumb, I feel sorry you for believing another human who can lie and hate instantly. Life is designed by god only pic.twitter.com/IBOPuXkujp
— Gayathri Raguramm (@gayathriraguram) March 16, 2020