எங்கள் கூட்டணி பலமானது: ராகுல் காந்தி

 

எங்கள் கூட்டணி பலமானது: ராகுல் காந்தி

திமுகவுடனான எங்கள் கூட்டணி பலமானது, காலத்தை வென்றது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

டெல்லி: திமுகவுடனான எங்கள் கூட்டணி பலமானது, காலத்தை வென்றது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மறைந்த திமுக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் வருகிற 16-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்று கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.

இந்நிலையில்,  கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை சோனியா காந்தியிடம் மு.க.ஸ்டாலின்நேரில் வழங்கினார். மேலும் சோனியா காந்திக்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவரது வீட்டுக்கு நேரில் சென்று முக ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆ.ராசா, கனிமொழி, டிஆர் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் டெல்லி வந்து சோனியாஜியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின்னர் நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். திமுக உடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது, பலமானது என பதிவிட்டுள்ளார்.