‘எங்களுக்கு ஒரு நாளும் கொரோனா வராது’.. நித்தியின் அடுத்த வீடியோ : கைலாசாவில் யாருக்காவது இருக்கா? கலாய்க்கும் நெட்டிசன்கள்!

 

‘எங்களுக்கு ஒரு நாளும் கொரோனா வராது’.. நித்தியின் அடுத்த வீடியோ : கைலாசாவில் யாருக்காவது இருக்கா? கலாய்க்கும் நெட்டிசன்கள்!

நித்தியானந்தா மீது பணமோசடி, பாலியல் புகார்கள் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நித்தியானந்தா மீது பணமோசடி, பாலியல் புகார்கள் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், குஜராத்தில் நித்தியானந்தா நடத்தி வந்த ஆசிரமம் மூடப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர். காவல்துறைக்குத் தண்ணீர் காட்டி வரும் நித்தியானந்தா அடிக்கடி யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்து வருகிறார்.

ttn

அவரை கடந்த ஆண்டே கைது செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் மீது அடுக்கடுக்காக புகார்கள் எழுந்து வருகின்றன. அவர் எங்கே இருக்கிறார், அவருக்கு யார் உதவி செய்கிறார்கள் என்று எதுவுமே கண்டுபிடிக்கப் படாத நிலையில் கரெக்டாக யூ டியூபில் வீடியோ மட்டும் போட்டு வருகிறார். 

ttn

இந்நிலையில் உலகே அச்சப்படும் கொரோனா வைரஸ் பற்றி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா வைரஸ் எங்களைத் தாக்காது என்றும் எங்களை பாதுகாக்கப் பரமசிவன் இருக்கிறார், காலபைரவர் பாதுகாவலராக இருக்கிறார் என்றும் எந்த காலத்திலும் எங்களுக்கு கொரோனா வராது என்றும் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவிற்கு நெட்டிசன் ஒருவர் கொரோனா வைரஸுக்கு ஏதாவது ஆலோசனை சுவாமி ஜி? கைலாசாவில் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது?’ என்று நித்தியை கலாயத்துள்ளார்.