எங்களுக்கு ஆண் குழந்தையே பிறக்கல! கணவனுக்கு சிறுமியை திருமணம் செய்துவைத்த பாசமிகு மனைவி!! 

 

எங்களுக்கு ஆண் குழந்தையே பிறக்கல! கணவனுக்கு சிறுமியை திருமணம் செய்துவைத்த பாசமிகு மனைவி!! 

கடலூர் மாவட்டத்தில் ஆண் குழந்தை இல்லாததால் விரக்தியடைந்த மனைவி தனது கணவனுக்கு, 16 வயது சிறுமியை திருமணம் செய்துவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் ஆண் குழந்தை இல்லாததால் விரக்தியடைந்த மனைவி தனது கணவனுக்கு, 16 வயது சிறுமியை திருமணம் செய்துவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திட்டக்குடி அருகே உள்ள வையங்குடி கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் மற்றும் செல்லக்கிளி தம்பதியினருக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகின்றன. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. 
ஆண் குழந்தை இல்லாததால் கணவனுக்கு 2 ஆவது திருமணம் முடிக்க செல்லக்கிளி ஆசைப்பட்டுள்ளார். இதற்காக தனது வீட்டிற்கு அருகில் 10 வகுப்பு முடித்துவிட்டு கூலிவேலைக்கு சென்று வந்த 16 வயது சிறுமியை தனது கணவனுடன் சகஜமாக பழக வைத்துள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்துகொண்டால் வசதியாக வாழவைக்கிறேன் என அந்த ஏழை சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார் அசோக் குமார். இந்த வார்த்தைகளுக்கு மயங்கிய சிறுமி திருமணத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளார். 

photo1

கடந்த வியாழக்கிழமை சிறுமியின் தந்தையிடம் சென்று, மகளை கோவிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஓகலூர் கிராமத்துக்கு அசோக்குமார்- செல்லக்கிளி தம்பதியினர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள கோவிலில் திருமணத்தை முடித்த அசோக் குமார் கோனூர் கிராமத்தில் தனக்கு தெரிந்தவர் ஒருவர் வீட்டில் இருவரையும் தங்கவைத்துவிட்டு செல்லக்கிளி வீடு திரும்பியுள்ளார். அந்த வீட்டில் அசோக் குமார் சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். 

கோவிலுக்கு சென்ற சிறுமியை காணததால் அசோக் குமார் மீது சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு கோனூரில் இருப்பது தெரியவந்தது. பின்னர் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து, சீரழித்த குற்றத்துக்காக அசோக் குமார்- செல்லக்கிளி தம்பதியினர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.