‘எங்கப்பாவுக்காக தான் உன்ன கட்டிகிட்டேன்…வேணும்னா அவரோட போய் உல்லாசமா இரு’ : மனைவிக்கு ஷாக் கொடுத்த புதுமாப்பிள்ளை!

 

‘எங்கப்பாவுக்காக தான் உன்ன கட்டிகிட்டேன்…வேணும்னா அவரோட போய் உல்லாசமா இரு’ : மனைவிக்கு ஷாக் கொடுத்த புதுமாப்பிள்ளை!

உனக்கும், சரவணனுக்கும் எதுவும் நடக்காது. வீணாகக் கனவு காணாமல் போய்  வேலையைப் பார் என்று கூறியுள்ளனர்.

விருதுநகர், கட்டையாபுரம், ஆவலப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல் (எ) சரவணன். இவருக்கும், திருநெல்வேலி, சத்திரத்தை சேர்ந்த பானு என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் வெகு விமர்சையாக திருமணம்  நடந்துள்ளது. இதையடுத்து திருமணம் முடிந்து இரவு முதலிரவுக்காகப்   பானு காத்திருந்த நிலையில் மாமனார் மூக்காண்டி, மாமியார் சண்முகசுந்தரி, சரவணனின் சகோதரிகள் உள்ளிட்டோர் சேர்ந்து, உனக்கும், சரவணனுக்கும் எதுவும் நடக்காது. வீணாகக் கனவு காணாமல் போய்  வேலையைப் பார் என்று கூறியுள்ளனர்.

marriage

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுகுறித்து தனது வீட்டில் கூறியுள்ளார். உடனே பெண் வீட்டார்  சரவணன் வீட்டில் விசாரித்த போது, எத்தனையோ ஆண்டுகள் கணவன் மனைவி தாம்பத்தியம் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்.  உங்கள் மகளுக்கு என்ன அவசரம்? இதையெல்லாம் வந்து ஏன் உங்களிடம்  சொல்லவேண்டும் என்று கடிந்து கொண்டார்களாம்.  சரி காலப்போக்கில் சரியாகிவிடும் என்று எண்ணிய பானுவுக்கு ஒருகட்டத்தில் சரவணனின் பதில் இன்னும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதாவது, ‘எனது தந்தை மூக்காண்டிக்காகத்தான் உன்னை திருமணம் செய்தேன். வேண்டுமென்றால் அவருடன் உல்லாசமாக இருந்துகொள். என்னை தொந்தரவு செய்யாதே’ என்று கொச்சையாகப் பேசியுள்ளார். மேலும் உன் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியதாகத் தெரிகிறது. 

ttn

இதையடுத்து பானு சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பானு புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சரவணன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்,  அவர்களின் விசாரணை நடத்தி வருகின்றனர்.