ஊழல் தி.மு.க என்று அவதூறு பரப்பிய தமிழக பா.ஜ.க… ரூ.100 கோடி கொரோனா நிவாரணம் தர நோட்டீஸ் அனுப்பிய தி.மு.க!

 

ஊழல் தி.மு.க என்று அவதூறு பரப்பிய தமிழக பா.ஜ.க… ரூ.100 கோடி கொரோனா நிவாரணம் தர நோட்டீஸ் அனுப்பிய தி.மு.க!

கொரோனாவுக்கு தி.மு.க ரூ.1 கோடி நிதி உதவி அறிவித்திருந்த நிலையில் அது பற்றி தமிழக பா.ஜ.க மிக மோசமான வகையில் விமர்சித்திருந்தது. இதைத் தொடர்ந்து தி.மு.க சார்பில் அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு தி.மு.க ரூ.1 கோடி நிதி உதவி அறிவித்திருந்த நிலையில் அது பற்றி தமிழக பா.ஜ.க மிக மோசமான வகையில் விமர்சித்திருந்தது. இதைத் தொடர்ந்து தி.மு.க சார்பில் அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் உதவி செய்யும்படி கேட்டுள்ளன. இதன் அடிப்படையில் தி.மு.க ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்தது. இதை தமிழக பா.ஜ.க விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. அதில், ஊழல் செய்து புறங்கையை நக்கிய தி.மு.க என்று மிக மோசமான முறையில் பதிவிட்டிருந்தது.

mk-stalin-78.jpg

இந்த நிலையில் தமிழக பா.ஜ.க, பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டவர்களுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் தி.மு.க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தி.மு.க வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்காக, அரசியல் எல்லைகள் கடந்து அனைவரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். ஆனால், இந்த இக்கட்டான நேரத்திலும், தி.மு.க. மீது அவதூறு பரப்பி அதன் மூலம் ஏதாவது அரசியல் லாபம் அடையலாமா எனத் தமிழக பா.ஜ.க செயல்பட்டு வருகிறது.

தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி, தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் தங்களது ஒரு மாதச் சம்பளத்தையும் வழங்கியுள்ளதோடு, தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் பணத்தை ஒதுக்கியுள்ளனர். அதோடு, தி.மு.கழக தலைமை நிலையமான ‘அண்ணா அறிவாலயத்தின்’ வளாகத்தில் அமைந்துள்ள ‘கலைஞர் அரங்கை’ கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளவும் வழங்கியுள்ளது. தி.மு.கழக நிர்வாகிகளும் தங்களால் இயன்ற உதவிகளை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இவை அனைத்தையும் ‘முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது’ போல், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தி.மு.க. எதுவுமே செய்யவில்லை என தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக அவதூறு பரப்பி வரும் பா.ஜ.க. கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கான ‘தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு’ 100 கோடி ரூபாய் வழங்கிட வேண்டும் என கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி அவர்களின் சார்பாக, வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், பா.ஜ.க. தேசிய தலைவர்  ஜே.பி. நட்டா, தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், ட்விட்டர் நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாகி, ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு ‘வக்கீல் நோட்டீஸ்’ அனுப்பியுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.