ஊரே கொரோனால சாகுது… முத்த மழையில் அமலா பால்!

 

ஊரே கொரோனால சாகுது… முத்த மழையில் அமலா பால்!

தமிழில் கீரிடம், தெய்வ திருமகன், தேவி 2  உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர்  ஏ.எல். விஜய். இவர் இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் அறிமுகமான அமலா பாலை  கடந்த 2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். பின்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளிலேயே  விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து  அமலாபால் மீண்டும்  தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிஸியாகி விட்டார்.  சமீபத்தில் இவர் ஆடை படத்தில் நடித்துள்ளார்.இதையடுத்து படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்த இயக்குநர்  ஏ.எல் விஜய்   ஐஸ்வர்யா என்ற பெண்ணை இரண்டாவது  திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் அமலா பால் தனக்கு புதிய காதலர் உள்ளதாக ஆடை படத்தின் போது  அறிவித்தார்.  

தற்போது உலகத்தையே அச்சுறுத்திவரும் இந்த கொரோனா வைரஸால் நாட்டு மக்கள் அனைவரும் ஊரடங்கினால் அவதிப்பட்டுவருகின்றனர். ஆனால் அமலாபாலோ கேரளாவில் பெய்யும் மழையில் ஆட்டம்போட்டுவருகிறது. தனது வீட்டில் வளர்ந்து வரும் மாமரத்தில் காய்த்த மாங்கனியை முத்தமிடுவதுப்போல் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவிதையுடன் பதிவிட்டுள்ளார்.