ஊரடங்கை மீறி வெளியே நடமாடுவதால் கொரோனா வேகமாக பரவும் – சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

 

ஊரடங்கை மீறி வெளியே நடமாடுவதால் கொரோனா வேகமாக பரவும் – சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஊரடங்கை மீறி வெளியே நடமாடுவதால் கொரோனா வேகமாக பரவும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை: ஊரடங்கை மீறி வெளியே நடமாடுவதால் கொரோனா வேகமாக பரவும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறி வெளியே சுற்றிய 34,178 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். தடை உத்தரவை மீறி வெளியே வந்தவர்களின் 28,040 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவ்வாறு ஊர் சுற்றியவர்களிடம் இருந்து இதுவரை 14 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ttn

இந்த நிலையில், ஊரடங்கை மீறி அனாவசியமாக வெளியே நடமாடுபவர்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கூறுகையில் வெளியில் நடமாடுவதால் நம்மையும் மீறி கொரோனா வைரஸ் நமக்கு தெரியாமலே வேகமாக பரவும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருப்பதால் நாம் மறைவாக இருப்பதே விவேகமானது என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.