ஊரடங்கை மீறிய மக்கள்… வாகனங்கள் பறிமுதல் செய்து சேலம் போலீஸ் அதிரடி!

 

ஊரடங்கை மீறிய மக்கள்… வாகனங்கள் பறிமுதல் செய்து சேலம் போலீஸ் அதிரடி!

சென்னை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் நேற்று பிற்பகல் முதலே முழு ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டது. மக்களுக்கு அவகாசம் துளி கூட அளிக்காமல் ஊரடங்கு அமலுக்கு வந்தது.

சேலத்தில் முழு ஊரடங்கை மீறி சாலையில் திரிந்த மக்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
சென்னை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் நேற்று பிற்பகல் முதலே முழு ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டது. மக்களுக்கு அவகாசம் துளி கூட அளிக்காமல் ஊரடங்கு அமலுக்கு வந்தது.

salem-78

இந்த நிலையில் இன்று முழு ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் நடமாடியவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி வாகனங்களை பறிமுதல் செய்தனர். 
அதிரடியாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பொருட்களை வாங்க முடியாத பலரும் இன்று கடைகள் திறந்திருக்கிறதா என்று பொருட்களை வாங்க வந்தனர். அவர்களுடைய வாகனங்களை எல்லாம் போலீசார் பறிமுதல் செய்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.