ஊரடங்கை மதிக்காமல் சீட்டு விளையாடிய 7 பேர் கைது!

 

ஊரடங்கை மதிக்காமல் சீட்டு விளையாடிய 7 பேர் கைது!

மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 52பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் காரணமாக தான் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 52பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

tt

இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1937 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம்  என்றும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்  என்று அறிவுறுத்தி வருகின்றனர். 

f

இந்நிலையில்  மதுரையில் ஊரடங்கை மதிக்காமல், கும்பலாக அமர்ந்து சீட்டு விளையாடியவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில் உள்ள சந்தனமாரியம்மன் கோயில்  வளாகத்தில் 7 பேர் கும்பலாக அமர்ந்து பணம் வைத்து சூதாட்ட முறையில் சீட்டு விளையாடி உள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் 7 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1000 ரொக்கம், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.