ஊரடங்கு நேரத்தில் தனியாக இருந்த பார்வை குறைபாடு உள்ள பெண்ணை வன்கொடுமை செய்த மர்ம நபர்!

 

ஊரடங்கு நேரத்தில் தனியாக இருந்த பார்வை குறைபாடு உள்ள பெண்ணை வன்கொடுமை செய்த மர்ம நபர்!

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மே மாதம் 3 ஆம் தேதி வரை  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த 53 வயதான பார்வை குறைபாடு உள்ள பெண் ஒருவர் ஊரடங்கில் வீட்டில் தனியாக இருந்த நிலையில் மர்ம நபரால்  பாலியல் வன்கொடுமை செய்யபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மே மாதம் 3 ஆம் தேதி வரை  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

tt

இந்நிலையில் போபாலைச் சேர்ந்த 53  வயதான பெண்ணின்  கணவரும், குடும்பத்தினரும் ராஜஸ்தானில் சிக்கிக் கொண்டனர். இதனால் பார்வை குறைபாடு உள்ள அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

tt

இது குறித்து அந்த பெண் போலீசில் புகார் கொடுக்க, புகாரின் அடிப்படையில் மர்மநபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் உரிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.