ஊரடங்கு நீட்டிப்பா?…மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

 

ஊரடங்கு நீட்டிப்பா?…மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏழை எளிய மக்களும், தினக்கூலி பெறும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மக்களின் ஏழ்மையை குறைக்கும் பொருட்டு தமிழக அரசு ரூ.1000 பணமும், ரேஷன் உணவு பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன் படி மக்களுக்கு நிவாரண பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவு இன்னும் நீட்டிக்க படுமா. இல்லையா என்று மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. 

tn

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடம் வீடியோ காலில் ஆலோசனை மேற்கொண்டார். அதில், ஊரடங்கு நீட்டித்தல், உணவு பொருட்கள் விற்பனைக்கு கட்டுப்பாடு, மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகிறது.  இன்று மாலைக்குள் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.