ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? – ஆலோசனையைத் தொடங்கிய மோடி! – புறக்கணித்த பினராயி விஜயன்

 

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? – ஆலோசனையைத் தொடங்கிய மோடி! – புறக்கணித்த பினராயி விஜயன்

ஊரடங்கை மே 3ம் தேதிக்குப் பிறகு நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தின் சார்பில் எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஊரடங்கை மே 3ம் தேதிக்குப் பிறகு நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தின் சார்பில் எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.

pinarayi-vij

நாடு முழுக்க கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதில் எந்த தளர்வும் வழங்காமல் மேலும் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஊரடங்கு ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்தாலும் கொரோனா தொற்று மட்டும் குறையவில்லை. பல மாநிலங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் மூன்று நாட்களில் கொரோனா தொற்று இருக்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதன்பிறகு அதிக அளவில் கொரோனா நோயாளிகள் கண்டறிவது அதிர்ச்சியை அளிக்கிறது.

modi-with-mask-89

இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக பல்வேறு மாநிலங்களும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அப்படி இல்லை என்றால், தங்கள் மாநிலங்களுக்குள் எந்தவித ரயில், விமான சேவையும் அனுமதிக்கக் கூடாது என்றும் மாநிலங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

edappadi-89

தமிழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் இந்த காணொலி காட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கேரளாவுக்கு நிதி உதவி செய்யவில்லை, தொடர்ந்து மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று கேரளா குற்றம்சாட்டி வரும் நிலையில் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தை பினராயி விஜயன் புறக்கணித்துள்ளார். கூட்டத்தின் முடிவில் ஊரடங்கு நீட்டிப்பது பற்றி முடிவெடுக்கப்பட்டாலும் இந்த வாரத்தின் இறுதியில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.