ஊரடங்கு உத்தரவை மீறி வீதியில் நடமாடிய 338 பேர் கைது!
கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி கடந்த 3 தினங்களுக்கு முன் அழைப்பு விடுத்தார்.
கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி கடந்த 3 தினங்களுக்கு முன் அழைப்பு விடுத்தார். அதையடுத்து இன்று பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, இந்திய மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் தேசிய சாலைகள், நகர சாலைகள், கிராம தெருக்கள் உட்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. அனைத்து கடைகளும் விடுமுறை அறிவித்து விட்டன.
இந்நிலையில் இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதியில் நடமாடிய 338 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.