ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து ரூ.3.27 கோடி அபராதம் வசூல்!

 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து ரூ.3.27 கோடி அபராதம் வசூல்!

கொரோனா அபாயம் புரியாமல் வெளியே சுற்றித்திரியும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,496 ஆக உயர்ந்துள்ள நிலையில், 824 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. மக்கள் வீட்டிலேயே இருந்தாலும், அத்தியாவசிய தேவைக்களுக்கு வெளியே சென்று தான் ஆக வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. 

ttn

இதனிடையே கொரோனா அபாயம் புரியாமல் வெளியே சுற்றித்திரியும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி, தடையை மீறி வெளியே வருபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து 3,06,339 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  தடையை மீறி வெளியே சென்ற 3,24,269 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், ஊரடங்கு உத்தரவை மீறி சென்றவர்களிடம் இருந்து ரூ. 3.27 கோடி அபராதம் பெறப்பட்டுள்ளதாகவும் 2,76,183 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.