ஊரடங்கிலும் ஒரே கொண்டாட்டம்! ரோஜாவின் அக்கப்போரு தாங்க முடியல… தொகுதி மக்கள் அடிமைகளா?

 

ஊரடங்கிலும் ஒரே கொண்டாட்டம்! ரோஜாவின் அக்கப்போரு தாங்க முடியல… தொகுதி மக்கள் அடிமைகளா?

நடிகையும் எம்.எல்.ஏவுமான ரோஜா நடந்துவரும்போது வழி நெடுகிலும் ஊர் மக்கள் நின்று ரோஜா மலர்களை தெளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகையும் எம்.எல்.ஏவுமான ரோஜா நடந்துவரும்போது வழி நெடுகிலும் ஊர் மக்கள் நின்று ரோஜா மலர்களை தெளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகையும் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவுமான நடிகை ரோஜா தனது தொகுதியில் கொரோனா தடுப்பு பணி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். நகரி தொகுதியில் கொரானா தடுப்பு நடவடிக்கையாக ஊர் முழுதும் கிருமி நாசினி திரவம் தெளிக்கும் பணியில் எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா ஈடுபட்டார். அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியிருந்த நிலையில் பப்ளிசிட்டிக்காக இதெல்லாம் ரோஜா செய்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. 

 

 

இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கும் தற்போதும் நடிகை ரோஜா, தனது தொகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் அமைக்கப்பட்ட போர்வெல் மோட்டரை திறந்து வைக்கச் சென்றார். அவரை வரவேற்கும் விதமாக வழிநெடுகிலும் இருபக்கமும் நின்ற கிராம மக்கள்,  அவர் வரும் பாதையில் பூக்களைத் தூவினர். அதன்பின் அவருக்கு பிரமாண்ட மாலை ஒன்று அணிவிக்கப்பட்டது. ஊரடங்கின் போது சமூக இடைவெளி குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், ரோஜா இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.