ஊரடங்கால் விரக்தியடைந்த மதுபிரியர்களுக்கு நற்செய்தி! கோவாவில் பிரபலமாகும் ஆரோக்கியமான மது!

 

ஊரடங்கால் விரக்தியடைந்த மதுபிரியர்களுக்கு நற்செய்தி! கோவாவில் பிரபலமாகும் ஆரோக்கியமான மது!

தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒரு வாரத்துக்குத்தான் ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்ற வகையில் குடிமகன்கள் தங்களை தயார் செய்துகொண்டனர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒரு வாரத்துக்குத்தான் ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்ற வகையில் குடிமகன்கள் தங்களை தயார் செய்துகொண்டனர். ஆனால், 24ம் தேதி இரவு பேசிய பிரதமர் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு என்று அறிவித்தார். இதனால் குடிமகன்கள் திக்குமுக்காடிப் போயினர். மோடி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே தமிழகத்தில் ஊரடங்கு தொடங்கிவிட்டது. அதனால், ஏப்ரல் 14ம் தேதி வரைக்கும் எதிர்கொள்ள டாஸ்மாக் சரக்கு வாங்க முடியாமல் போயினர் தமிழக குடிமக்கள். மது கிடைக்காததால் தற்கொலை, வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. மதுவுக்கு பதில் ரசாயனம் குடித்து உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஊரடங்கால் நூற்றுக்கணக்கான ஒயின் கடைகளும் மூடப்பட்டன.

cocktails

இதனால் மதுவுக்காகவே கோவாவில் வசிக்கும் மதுபிரியர்கள் செய்வதறியாது திண்டாடினர். அவர்களின் கவலையை போக்கும்விதமாக, ஆரோக்கியமான முறையில் போதை தரக்கூடிய பழச்சாறு விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது.இதனை வாங்க வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து விநியோகம் செய்துவிடுகின்றனர். காட்டுப் பழச்சாறு எனப்படும் யுராக் ஒருவகையில் நாட்டு மதுபானமுமாகும். ஆனால் தீங்கு செய்யாத மதுபானம்.  முந்திரி ஆப்பிள் பழச்சாறுகளிலிருந்து தயாரிக்கப்படும் யுராக் வணிக ரீதியாக விற்கப்படவில்லை. ஆனால், கோவாவின் கிராமங்களில் பரவியிருக்கும் கொல்லைப்புறங்களில் இதன் உற்பத்திகள் நடைபெறுகின்றன. ஒரு லிட்டர் பாட்டில் யுராக் விலை 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறாது.