ஊரடங்கால் பள்ளியில் தஞ்சம் புகுந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்!

 

ஊரடங்கால் பள்ளியில் தஞ்சம் புகுந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்  மக்கள் பலரும் வெளியூரில் சிக்கி கொண்டு சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்  மக்கள் பலரும் வெளியூரில் சிக்கி கொண்டு சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஊரடங்கால் வெளியூரில் சிக்கி கொண்டார். இதனால் உணவுக்கு கஷ்டப்பட்டு வந்த நிலையில் வேறு வழியில்லாமல்  சொந்த ஊருக்கு நடைபயணம் செய்துள்ளார். ஒருக்கட்டத்தில் மதோபூர் படோடா பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது இரவு வந்ததால், போலீஸாரிடம் உதவி கேட்டுள்ளார். 

tt

இதனால் போலீசார் அந்த கிராம மக்களிடம் இதுகுறித்து கோரிக்கை எழுப்ப, அவர்களோ  அந்த பெண்ணுக்கு கொரோனா இருக்க வாய்ப்புள்ளது. அதனால் அவரை தனிமையில் தங்க வைக்க வேண்டும் என்று கூறி அங்குள்ள பள்ளியில் தங்க இடமளித்து உள்ளனர். 

ff

இதையடுத்து அப்பெண் தனிமையில் இருப்பதை அறிந்து இரவில் பள்ளியில் புகுந்த அதேபகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் காலையில் போலீசில் புகார் அளிக்க, சம்பந்தபட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.