ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு போட்ட எம்.ஜி.ஆர், நம்பியார்…!

 

ஊரக உள்ளாட்சித் தேர்தலில்  ஓட்டு போட்ட எம்.ஜி.ஆர், நம்பியார்…!

அங்கு வசிக்கும் நரிக்குறவர்களுக்கு பெரும்பாலும் நடிகர், நடிகைகள் பெயர் தான் வைக்கப்பட்டுள்ளதாம்.

தமிழகத்தில் 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைய உள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து மக்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

ttn

 

இந்நிலையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருநெடுங்குளம் என்னும் கிராமத்தில் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தேவராயநேரி நரிக்குறவர் காலணியைச் சேர்ந்தவர்கள். அந்த பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர்களில் கிட்டத்தட்ட 900க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

ttnh

அங்கு வசிக்கும் நரிக்குறவர்களுக்கு பெரும்பாலும் நடிகர், நடிகைகள் பெயர் தான் வைக்கப்பட்டுள்ளதாம். அதில், திரைத்துறையில் சாதனை படைத்த நடிகர்கள் எம்ஜிஆர், நம்பியார் பெயர் கொண்ட இரண்டு பேர் இணைந்து வந்து இன்று வாக்களித்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் மாமன், மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.