ஊட்டியில் மழை இல்லை: வெற்றிமாறனுக்கு நெத்தியடி கொடுத்த விவேக்!

 

ஊட்டியில் மழை இல்லை: வெற்றிமாறனுக்கு நெத்தியடி கொடுத்த விவேக்!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் விவேக்.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் விவேக். தனது காமெடி மூலம் சமூகத்திற்கு நிறைய நல்ல கருத்துக்களை கூறுவதால் இவருக்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.  மேலும் படங்களில் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது மரங்கள் நடும் சமூக பணியையும் செய்து கொண்டிருக்கின்றார். 

அந்த வகையில் ஜூலை 1ஆம் தேதியான இன்று ஊட்டியில் மரங்கள் நடும் விழாவில் கலந்து கொள்ள போவதாகவும், அருகில் இருக்கும் மக்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு வெற்றிமாறன் என்ற ட்விட்டர் வாசி பதிவு ஒன்றை வெளியிட்டிள்ளார். அதில் ‘ஊட்டியில் நிறைய மரங்கள் உள்ளது. எனவே மரங்கள் இல்லாத பகுதிகளில் கவனம் செலுத்தி அதிக மரங்களை நடலாம்’ என்று கருத்து தெரிவித்திருந்தார். 

vivek

இதற்கு பதிலளித்த விவேக், ‘ஊட்டியில் நிறைய மரங்கள் இருக்கலாம். ஆனால் மழை இல்லை. காரணம் யூக்கலிப்ட் சில்வர்ஓக், கிருத்துமசு மரங்களால் மழையை ஈர்க்க முடியாது. அவை நிலத்தடி நீரை உரிஞ்சுவதோடு அதை ஆவியாக்குவதும் இல்லை. மலை நாட்டு மரங்கள் நடப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.