உ.பி.யில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

 

உ.பி.யில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

உத்தர பிரதேசத்தில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சீதாபூர் மாவட்டத்தில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 3 வயது குழந்தை திடீரென காணாமல் போகியுள்ளது. அக்கம்பக்கத்தில் தேடியும் குழந்தை கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பக்கத்து வீட்டில் தேடியுள்ளனர். அப்போது பெற்றோருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

child abuse

காரணம் குழந்தை இறந்த நிலையில் ஒரு கோணி பைக்குள் இருந்துள்ளது. இதனைக்கண்டு பதறிப்போன பெற்றோர், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பக்கத்துவீட்டுக்காரரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை பக்கத்துவீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.